சுவிஸ்: 14°C
இலங்கை: 27°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

பல்கலைக்கழக வெற்றிடங்களை நிரப்ப புதிய திட்டம்: பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன அறிவிப்பு!

செந்தில் குமார்7 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
பல்கலைக்கழக வெற்றிடங்களை நிரப்ப புதிய திட்டம்: பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன அறிவிப்பு!

பல்கலைக்கழக வெற்றிடங்களை நிரப்ப புதிய திட்டம்: பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன அறிவிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

பல்கலைக்கழகங்களில் ஏற்படும் கல்விசார் மற்றும் கல்விசாரா பணியிட வெற்றிடங்களை நிரப்பும் வகையில், பணியாளர் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மாதாந்தம் மீளாய்வு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில் ஏற்படும் கல்விசார் மற்றும் கல்விசாரா பணியிட வெற்றிடங்களை நிரப்பும் வகையில், பணியாளர் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மாதாந்தம் மீளாய்வு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

பல்கலைக்கழக உபகுழு, பணியாளர் ஆட்சேர்ப்பு தொடர்பில் மாதாந்தம் மீளாய்வு செய்ய தீர்மானித்துள்ளது, கல்விசார் மற்றும் கல்விசாரா பணியாளர்களை அதிகரிப்பதற்கான அனுமதி ஏற்கனவே பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

பல்கலைக்கழகங்களில் பணியிட வெற்றிடங்கள் கண்டறியப்படும் சந்தர்ப்பங்களில், மேலதிக ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படுவதோடு, ஒவ்வொரு பல்கலைக்கழகத்துடனும் தனித்தனியாக ஆட்சேர்ப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றன.

 

இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக கணிசமான நிதி செலவிடப்பட்டுள்ளன. எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
செந்தில் குமார்

செந்தில் குமார்

முதன்மை ஆசிரியர் (Chief Editor)

கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இயங்கி வருகிறார். சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

முகநூல் களியாட்ட விருந்துகளைக் கண்காணிக்க விசேட புலனாய்வு நடவடிக்கை: பொலிஸ் மாஅதிபர் அதிரடி உத்தரவு!

இலங்கையில் முகநூல் ஊடாக ஒழுங்கமைக்கப்படும் களியாட்ட விருந்துகள் மற்றும் அவை நடைபெறும் இடங்களைக் கண்டறிந்து கண்காணிப்பதற்காக பொலிஸ் மாஅதிபரின் பணிப்புரைக்கு அமைய விசேட புலனாய்வு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

11 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கையில் ஒட்டுமொத்த சுகாதாரச் சேவையும் சரிந்து விழும் அபாயகரமான நிலை!

சுகாதாரச் சேவையின் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களின் வெற்றிடங்களின் எண்ணிக்கை 2015ஆம் ஆண்டிற்குப் பின்னர் இதுவரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முழுமையாகத் திருத்தப்படவில்லை என்பதால், ஒட்டுமொத்த சுகாதாரச் சேவையும் சரிந்து விழும் அபாயகரமான நிலையை எட்டியுள்ளதாக அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) கடுமையாக வலியுறுத்தியுள்ளது.

11 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

செஸ் வரிக்கு விடைகொடுக்கிறது இலங்கை: உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க அரசின் புதிய அதிரடி!

உள்நாட்டுத் தொழில்முனைவோரைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள ‘செஸ்’ வரியை முழுமையாக நீக்கிவிட்டு, புதிய சுங்கவரி முறையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

11 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் மீட்பு: பாகிஸ்தான் கொள்கலன்களைக் கைப்பற்றிய சுங்கத்துறை!

பாகிஸ்தானில் இருந்து கடல் வழியே இரு கொள்கலன்களில் நுட்பமாக மறைத்து கொண்டுவரப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களைச் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர்.

11 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm